அகல்யாவின் பரிசு - 26. மறுநாள் கண்ணன் வேலைநிமித்தமாக வெளியே சென்றான். கோகுல்நாத் தூங்கி எழுந்து வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி. பாரு தேம்பி தேம்பி அழுத வண்ணம் இருந்ததை கண்டு என்னம்மா ஆச்சு என்றார். மாமா !! உங்க பிரச்சினையில் என்னை மிகவும் கடிந்து கொண்டுவிட்டு கோபமாக வெளியே சென்று விட்டார். என்ன உங்கள் பிரச்சினை என்பதை தயவுசெய்து சொல்லிவிடுங்கள் என்று மீண்டும் அழ தொடங்கினாள்.கோகுல்நாத் மெல்ல அவள் அருகில் வந்து, அம்மா இதோ பார் அந்த அசிங்க கதையெல்லாம் நீயும் கேட்காதே, அவனையும் கேட்க முயற்சிக்க வேண்டாம் என்று தடுத்து விடு, அதை தெரிந்து கொண்டால் உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மேலும் அந்த உண்மைகளை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் நான் எனது சொத்து எல்லாவற்றையும் அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செயது கொள்ள வேண்டியதுதான். இதுதான் உங்கள் ஆசை என்றால் தாராளமாக நீங்கள் கேளுங்கள் என்றார். இது என்னடா பிள்ளையார் பிடிக்க குரங்கு முளைத்த கதையாகிறதே என்று நினைத்த பாரு , இல்லை இல்லை வேண்டாம் , வேண்டாம், எங்களுக்கு நீங்கள் தான் முக்கியம் என்று கூறிவிட்டு கண்ணைத...
Comments
Post a Comment