Posts

Showing posts from September, 2018

நெற்றியடி

நெற்றியடி சி லநேரம் வெள்ளையரில் என்னஉண்டென்று வியந்ததுண்டு அவர்களது சீரும் சிறப்போ,  பாத்தியதையோ, சலுகையோ அல்லது அதிகாரமோ !! எதுவாயினும் எல்லாமே ஏதுவானது அவர்களுக்கு. பொலிவிழந்து போராடவோ, வாளேந்தி போரிடவோ தேவையிருந்ததில்லை!!!  வரலாறு  - அது எப்போதோ ஒருமுறை சரியாக எழுதப்படுகிறது!! மூண்ட போரும், பெற்ற வெற்றிகளும் மின்னலாம்  ஆனால் அவை பொன்னல்ல, அவை உண்மையுமல்ல, இன்னும் பல,, சாவின் முத்தம், சர்வாதிகாரம், என்று எத்தனையோ வெற்றிகள் வெள்ளையரை பலமாக்கும் ஊக்கிகள். எதிர்ப்போருக்கு  நீடிக்கும் நீண்ட , கடின போருக்கான சவால்கள். நானும் வெள்ளையனே ,  இந்த ஒரு வீச்சத்தில், என் மனை பெண்டிற்க்கு அவர்களை விடவும் வலிமையில். இயற்கையின் சலுகையால் அடைந்த ஆணாதிக்க பலத்தின் வேகம் என் மனை பெண்டிரை அவர்தம் நியாயஉரிமைக்கும் போரிடவைக்கும். நானும் ஒரு ஆயுதமாய் ஆகிப்போனேன் !! அடிக்க, வளைக்க, நசுக்க , பொடிப்பொடியாக்கவென்று. என் பெண்டிற்கு துயரிழைக்கும் இவ்வெள்ளையனை முதலில் கொன்று பின்னரே போரிட்டு வாகை சூட வேண்டும் வெள்ளையனை வென்று.

AGALYAAVIN PARISU - 22 அகல்யாவின் பரிசு - 22

அகல்யாவின் பரிசு - 22 வாழ்க்கை !!!!!   எதிர்பாராத ஆச்சரியங்களின் கூடு.    என்ன வழங்கும் , எதை பிடுங்கும்  என்பதை  கணிக்கமுடியாத காடு.  அகல்யா அப்படிதான் நினைத்தாள். சீனு ஏன் விலகினான். என்ன குறை இருந்திருக்க முடியும்? யோசித்ததில் , அவனுக்கு என்ன கொடுத்தாள் அகல்யா. அவளைக்கூட முழுமையாக கொடுக்கவில்லை. அவனும் அவளை தொட்டதில்லை. இன்று மைதிலியோடு காமக்காட்டாற்றில் களித்து நீந்திக் கொண்டிருக்கிறான். ஐயோ, இவ்வளவுதானா இவன், இதற்குத்தானா ஆசைப்பட்டான் இவன். சொல்லியிருந்தால் அள்ளி கொடுத்திருப்பேனே என்னையையே , பாவி சொல்லாமல் சென்றுவிட்டான், கொல்லாமல் கொன்றுவிட்டான். அகல்யாவிற்கு மைதிலியை பார்த்த கோலம், அவளின் தழும்புகள் இப்போது அவளுக்குள் விரகம் என்னும் இளமை ஊற்றை உருவாக்கிக்கொண்டிருந்தது. என்னே விந்தை. ஊற்றெடுக்குமாம் விரகம், அதில் உண்டாகுமாம் தாகம். தாகம் தீர வழிஇல்லாத பாலைவன ரோஜா பாவம் பரிதவித்தது. நாட்கள் நகர்ந்தது . ராஜலிங்கத்திடம் இருந்து செய்தி வந்தது. சொத்து பரிவர்த்தனையை சட்டரீதியாக முடித்துக்கொள்ள, அகல்யா உடனே தென்காசிக்...