Posts

Showing posts from December, 2018

AGALYAAVIN PARISU - 29 அகல்யாவின் பரிசு - 29

அகல்யாவின் பரிசு - 29 கண்ணனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. சீனுவிற்கு செய்தி அனுப்பி அவனை மறுநாள் அம்பாசமுத்ரத்திற்கு வரச்சொல்லிருந்தான். தீவிர மருத்துவ சிகிச்சைக்குப்பின் அகல்யா ஓரளவு தெம்புற்றிருந்தாள். கண் விழித்த அவளை சுற்றி சீனு, கண்ணன் , பாரிஜாதம், மைதிலி , கோகுல்நாத் , ஆருஷி (விஜய்யின் தாயார்) மற்றும் கண்ணனுக்கு வேண்டப்பட்ட நண்பர்கள் இருவர் அவளை சுற்றி நின்றிருந்தனர்.  முதலில் அகல்யா ஆருஷிக்கு வணக்கம் சொல்லி , விஜய் எப்படி இருக்கிறார் என்று கேட்க , கால் வீக்கத்தால் நடக்க முடியாதலால் அவன் வரவில்லை, மற்றபடி ஏதும் அபாயம் இல்லை, நான் மட்டும் வந்தேன் உன்னை பார்க்க என்றார். அகல்யாவிற்கு தர்மசங்கடமாக இருந்தது. கண்ணனிடம் ஆருஷி என்ன சொல்லியிருப்பார், நினைக்கவே அவளுக்கு சற்று உறுத்தியது கோகுல்நாத் கனைத்தவாறே கண்ணா புறப்படு கோவிலுக்கு என்று கூற, கண்ணன் அகல்யாவை பார்க்க, அகல்யா சீனுவை பார்க்க, சீனு , அகல்யாவிடம் பயப்படாமே வந்து உண்மையா சொல்லு அகல்யா. இப்போ எல்லாரும் பெரியவங்க ஆயிட்டாங்க , புரிஞ்சிப்பாங்க என்றான் விட்டேத்தியாய். ஐயோ இது சத்தியம் அல்லவா, என்னவெ...

AGALYAAVIN PARISU - 28 அகல்யாவின் பரிசு - 28

அகல்யாவின் பரிசு - 28 அ கல்யா அந்த நீண்ட நெடிய மாளிகையின் வாயிற்கதவருகே தள்ளாடி தள்ளாடி வந்து நின்றாள். முகத்தில் களைப்பு. பசித்த வயிறு. பாசம் பொங்கும் கண்கள். நரைத்த கீற்று ஆங்காங்கே, முதுமை முளை விட்டிருப்பதை பறைசாற்றியது. டக் ...டக் ...டக். வாயிற்கதவை தட்டினாள். காவற்காரன் கதவிடுக்கின் வழியே திறந்து பார்த்து, யாரம்மா என்ன வேணும் என்று கேட்டான்.இப்போது இதோ அகல்யா அரை மயக்கத்தில் இருக்க கோகுல்நாத் காவலாளி கையில் இருந்த பத்திரத்தை பிடுங்கி படிக்கலானார். அதில் ருபாய் 2 கோடிக்கான கொடை பத்திரமும், தென்காசியில் உள்ள சொத்துக்களையும் கண்ணன் பெயரில் எழுதி வைத்து இருந்தது கண்டு ஆனந்தம் கொண்டார். ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாமல் அவளை அடிக்க மீதும் போக, வேகமாக குறுக்கிட்ட கண்ணன் அவரிடம் இருந்த பத்திரத்தை பிடுங்கி வெறிகொண்டவனாக கத்தினான். அப்பா அங்கேயே நில்லுங்க. இன்னொரு அடி அவங்கமேல விழுந்தா இந்த பத்திரத்தைகிழித்து போட்டுவிடுவேன் என்றதும், கோகுல்நாத் அவரையும் அறியாமல் நின்றுவிட்டார். அவர் இதை எதிர்பார்கவில்லை. ஹூம் நம்ப ரத்தமா இருந்தா இவ்ளோ முட்டாளா இருப்பானா? என்று மீத...

AGALYAAVIN PARISU - 27 அகல்யாவின் பரிசு - 27

அகல்யாவின் பரிசு - 27  கண்ணா நீ தயவு செய்து இந்த விஷயத்தை பத்தி கேட்காதே. அப்பறம் சொல்றேன் . அதுக்கும் ஒரு நேரம் வரும். அதனாலே இப்போ நீ என்ன பாக்க வந்த சந்தோஷத்தை கொண்டாடுவோம். உன்னை பெற்று எடுத்தேனே தவிர , சில மாதங்கள் பிறகு நீ பிரிந்து விட்டாய். உனக்கு ஒரு வாய் சோறு கூட செய்து கொடுக்கல. அதனாலே உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுப்பா , அதை செய்து தருகிறேன் என்றாள்.கண்ணன் அழுதவாறே அம்மா , அம்மா என்று தேம்பினான். நீண்ட உரையாடல்களின் பின்னே, கண்ணன் அம்மா , அப்பா இப்போது பெரிய பணக்கஷ்டத்தில் இருக்கிறார். உங்கள் டிரஸ்ட் மூலம் கடனாக கொடுத்து உதவ முடிந்தால் பெருமை உங்களோடு சேர்ந்து எனக்கும். கட்டாயம் இல்லை. பணத்துக்காக நான் உங்களை பார்க்க வரவில்லை, அதனால் தப்பாக நினைக்கவேண்டாம் . அகல்யா அவனை ஏறிட்டு பார்த்தாள். கண்ணன் வெகுளி. கோகுல்நாத்தை போல் கயவன் அல்ல என்று உணர்ந்ததே அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது.   மறுநாள் அகல்யா கண்ணனிடம் , கண்ணா நீ ஊருக்கு போ, நான் ரெண்டு நாள் கழிச்சி என் நண்பர்  திரு விஜய் அவர்களுடன் உங்கள் ஊருக்கு வந்து அங்கே தரேன் என்ற...

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

அகல்யாவின் பரிசு - 26. மறுநாள் கண்ணன் வேலைநிமித்தமாக வெளியே சென்றான். கோகுல்நாத் தூங்கி எழுந்து வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி. பாரு தேம்பி தேம்பி அழுத வண்ணம் இருந்ததை கண்டு என்னம்மா ஆச்சு என்றார். மாமா !! உங்க பிரச்சினையில் என்னை மிகவும் கடிந்து கொண்டுவிட்டு கோபமாக வெளியே சென்று விட்டார். என்ன உங்கள் பிரச்சினை என்பதை தயவுசெய்து சொல்லிவிடுங்கள் என்று மீண்டும் அழ தொடங்கினாள்.கோகுல்நாத் மெல்ல அவள் அருகில் வந்து, அம்மா இதோ பார் அந்த அசிங்க கதையெல்லாம் நீயும் கேட்காதே, அவனையும் கேட்க முயற்சிக்க வேண்டாம் என்று  தடுத்து விடு, அதை தெரிந்து கொண்டால் உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மேலும்  அந்த உண்மைகளை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் நான் எனது சொத்து எல்லாவற்றையும் அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செயது கொள்ள வேண்டியதுதான். இதுதான் உங்கள் ஆசை என்றால் தாராளமாக நீங்கள் கேளுங்கள் என்றார். இது என்னடா பிள்ளையார் பிடிக்க குரங்கு முளைத்த கதையாகிறதே என்று நினைத்த பாரு , இல்லை இல்லை வேண்டாம் , வேண்டாம், எங்களுக்கு நீங்கள் தான் முக்கியம் என்று கூறிவிட்டு கண்ணைத...

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

அகல்யாவின் பரிசு - 25                          கண்ணன் தனது தாய் நினைவால் வாடினான். கோகுல்நாத்தை என்ன நடந்தது என்று கேட்க கோகுல்நாத் எல்லாவற்றையும் மழுப்பி தனது திட்டத்தை நிறைவேற்ற முனைப்பானார். டேய் கண்ணா!!  உன்னுடைய அம்மா எப்போவுமே இறந்து போய் தெய்வமா அந்த போட்டோவுலயிருக்காங்களே அவங்கதான். வேறுயாரையாவது அம்மான்னு சொல்லிக்கிட்டு என்கிட்டே வந்தே நான் பொல்லாதவன் ஆகிடுவேன் ஜாக்கிரதை என்றார்.  அப்பா, இவங்க என்ன பெத்த அம்மா இல்லையே  தவிர அவங்கள தவிர அவங்க இடத்துல வேற யாரையும் என்னால வச்சி பாக்க முடியாது. அவங்கள போல ஒரு தெய்வம் என்னை சீராட்டி பாராட்டி வளர்த்தது நான் செய்த புண்ணியம் அப்பா. நான் அதை கேட்கல. என்ன பெத்த தாய் அகல்யா அம்மான்னு சொன்னாங்களே, நீங்களும் அவங்களும் ஏன் பிரிஞ்சீங்க எனக்கு விளக்கமாக சொல்லுங்க என்று கேட்க , கோகுல்நாத் எரிமலையானார். டேய் கண்ணா , அதைப்பற்றி எல்லாம் என்னிடம் கேட்காதே. உனக்கு அது தேவையில்லாத , கடந்தகால விஷயம்.  ஒண்ணு ஞாபகம் வச்சிக்கோ கண்ணா  அகல்யா...

AGALYAAVIN PARISU - 24 அகல்யாவின் பரிசு - 24

 அகல்யாவின் பரிசு - 24                                     க ல்பனா காற்றோடு கரைந்து போன செய்தி அகல்யாவை இடியென உலுக்கியது. கண்ணீரும் கம்பளையுமாய் அவளையும் அறியாமல் அலறி அடித்து ஓடிச்சென்று அவர்களின் உடலின் மேல் ஒரு மலர் வளையம் இட்டு பக்கத்தில் நின்றவாறே மனதுக்குள் மௌனக்கண்ணீர் வடித்தாள். எல்லா சடங்கும் முடிந்து அவர் வாழ்ந்த அந்த வீடு வெறுமையானது. ஒரு நாள் மாலை நினைவுகளின் பாரத்தால் மனஅமைதி வேண்டி அகல்யா ,கல்பனா இருந்த அறையில் அவர் படத்தின் முன்பு அமர்ந்து மானசீகமாக பேசிக்கொண்டிருந்த வேளை, விஜய் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினான். அகல்யா ! அகல்யா! என்று படபடப்போடு வந்தவன், அகல்யாவை கண்டவுடன் முகம் மலர்ந்தான். அகல்யா உனக்கு ஒரு குட் நியூஸ் என்றான். அகல்யா அவனை ஏறிட்டு பார்த்து சொல்லுங்க விஜய் என்றாள்  சுரத்தேயில்லாமல். அகல்யா , இப்ப நான் சொல்ற விஷயம் கேட்டா நீ ரொம்ப சந்தோஷப்படுவே என்றான். அகல்யா அவனை நோக்கி புருவம் சுருக்கி சொல்லுங்க சீக்கிரம் என்றாள். விஜய் விவரிக்க ஆரம்பி...