Posts

Showing posts from August, 2019

மழையோடு ஓர் உரையாடல்.

மழையோடு ஓர் உரையாடல். உறக்கம் கலைந்தது! அதிகாலை 4 மணி.!! அத்துணை உயிர்களும் ஆழ்நித்திரையில்!! சடசடவென ஓர் சத்தம்!!! கதவுகளின் இதய துடிப்போ அது! யாரின் அழைப்பு இது!! கதவைத்திறந்தேன் அல்ல கனவுகள் திறந்தேன்!! வெளியில் மழையோ மழை. அழைத்தாயோ மழையே!! என்றேன் "கொட்டி நான் தீரும்முன்பே - கண்  கொட்டாமல் உரையாடிவிடு என்னே!!" ஏற்கப்பட்டது மழையின் அழைப்பு. ************************************* எங்கள் உயிரே! என் உற்சாகமே! ஜீவ நதியே! நதியின் மூலமே!! எங்கிருந்து வருகிறாய் என்றே ஏகினேன்                      உலகெலாம் உணர்ந்தவன்!    ஓதற்கு அரியவன் !!                      தலைபிறந்து வருகிறேன், வளம்போற்ற வருகிறேன்! ஜோதிப்பிழம்பாம் எங்கள் ஈசன், அச்ஜோதியில் எங்கனம் நீர் பிறந்ததென சொல்வாயோ மென்மழையே!                      அணுவுக்குள் உலகம் உண்டு !! கல்லுக்குள் ஈரமும் உண்டு       ...

malarum ninavalai

பொங்கும் பூம்புனல் நெஞ்சுக்குள்                         பூபாளம் இசைக்குதடி! தங்குமோர் பனிச்சுழல் தம்தம்முள்          தனிமைக்கும் துணையானதடி! உலகெங்கும் உதிர்ந்திடினும் நட்பகத்துள்                       ஓர்தனிஉலகம்  சுழலுதடி! தாங்கும் நினைவுகள் நம்மில்                                       தாலாட்டு பாடுதடி ! வண்ணங்கள் சேர்வதினால் இது  வானவில்லோ ! வார்த்தைகளை கூடுவதால் இது கவிகளஞ்சியமோ! வாலிபத்தை தக்கவைக்கும் வாழ்வியலோ !! அனுபவத்தை பகிர்வதால் இது அறிவுக்கழகமோ! அத்தனைக்கும் சேர்ந்தபெயர்தான் இம் " மலரும் நினைவுகளோ"!!