Posts

Showing posts from July, 2018

AGALYAAVIN PARISU - 16 அகல்யாவின் பரிசு - 16

அகல்யாவின் பரிசு - 16                                         பத்து நாட்கள் கடந்தன. சீனு இன்னமும் படுத்த படுக்கையிலேயே இருந்தான். அகல்யாவிற்கு இப்போது பரவாயில்லை, பழைய நிலைமைக்கு வந்துவிட்டாள். சீனுவிற்கு விஷம் மூளையை தாக்கியதால் அவனுக்கு இப்படி ஓர் நிலைமை. ஆனால் இப்போது கை, கால்களை அசைக்கிறான். அகல்யாவிற்கு நம்பிக்கை துளிர் விட்டது. விரோதிகள் யாரும் அங்கே வராதது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. பாவம் அவள். அது வக்கீலின் நாடகம் என்பது அவளுக்கு புரியவில்லை. ஆம், வக்கீல் தனது போலீஸ் கைக்கூலி, கமிஷனர் அகல்யாவை விரைவில் கண்டுபிடுக்க சொல்லியதை போனில் கூறியஉடனே, ஆட்களை அனுப்பி சீனு சென்ற பைக்கை தேடி , அதை மறைத்து வைக்க சொன்னார். பிறகு  அகல்யாவும் , சீனுவும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அந்த கிராமத்திலேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டார். நாராயணசாமிக்கு ருபாய் 50,000 அனுப்பும்படி தந்தி அடித்துவிட்டு காத்திருந்தார். பாவம் நாராயணசாமி இறந்தது தெரியாமல் இலவு காத்த கிளி போல் காத்துக்கிடந்து, கடைசியி...

AGALYAAVIN PARISU - 15 அகல்யாவின் பரிசு - 15

 அகல்யாவின் பரிசு - 15.                 ராஜலிங்கத்தின் கண்கள் வியப்பால் விரிந்தன. சந்தோஷத்தில் அவருக்கு நெஞ்சமே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது அகல்யாவின் புகைப்படத்துடன் கூடிய செய்தியை படித்தவுடன். ஆனாலும் , " மாப்ள, அப்பாவைத்தானே குறி வைக்க சொன்னேன் , அந்த பொண்ண பலியாக்கிடீங்களே, என்னப்பா இது , பாவம் அந்த பொண்ணு, பொம்பள பாவம் பொல்லாதது." என்றார். " இதுதான் மாப்ள ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ங்கறது " என்று ஆணவமாய் சிரித்தான். இப்போ நாராயணசாமி எங்கே? என்றார் ராஜலிங்கம். " ஆள் தென்காசிக்கு வந்தாச்சு. இனி நம்ம வேலைய பாருங்க, உசுர மட்டும் விட்டுவிட்டு  மற்றதையெல்லாம் எப்படி உருவி எடுக்கிறேன் பாருங்க என்று கொக்கரித்தான். ராஜலிங்கம் தொண்டையை செருமிக்கொண்டே " என்னவோ மாப்ள, என்னோட நீண்ட நாள் ஆசையும் பழி வாங்க வேண்டும் என்ற வெறியும் இப்போதான் அடங்கியது. அவனை இந்த ஊரை விட்டு எப்படியாவுது துரத்திடு போதும் " என்றார்.                              நாராயணசாமி வந்ததை...

AGALYAAVIN PARISU - 14 அகல்யாவின் பரிசு - 14

அகல்யாவின் பரிசு - 14                                  வாழ்க்கை வாழும் நிலைமையை இப்படியும் புரட்டிபோடுப்படுமா? என்ன ஒரு பயங்கரம். அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத இந்த மனிதன், என்னவெல்லாம் கோட்டை கட்டுகிறான். எவ்வளவு ஆணவத்தை இறைத்து ஆட்டம் போடுகிறான். கண்ணீர் வற்றும் வரை அகல்யா கரைந்தாள். இனியென்ன செய்வது. எப்படி போவது. தந்தையின் நிலைமை என்ன ஆயிற்று, சீனு எப்போது நலமடைவான்?  கேள்விகள் அணுகுண்டாய் மண்டையை குடைந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு எப்படி இருந்த வாழ்க்கை இப்போது எப்படி இப்படி ஓர் அதள பாதாளத்தில் வீழ்ந்தது. அகல்யாவிற்கு ஒரு கணம் நிகழ்வது கனவா அல்லது  நனவா என்று கூட சந்தேகம் வந்தது . நனவுதான் என்பதை அவள் புத்தி ஏற்றுக்கொண்டாலும் இதயம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறியது.                                           ஏதோ சத்தம் கேட்க சிந்தனை கலைந்து அ...

AGALYAAVIN PARISU - 13 அகல்யாவின் பரிசு - 13

அகல்யாவின் பரிசு - 13                         கூ ட்டம் குழுமியது. கூடவே கூர்வலியும் கூடியது. சீனு நீலம் பூத்தான். செயலிழந்து மூர்ச்சையானான். அகல்யா அந்த வலியிலும் கண்ணில் பட்டோரிடம் கை கூப்பினாள் , உதவி வேண்டி.                          யாரோ ஒருவர் அதட்டினார். அதிகாரத் தொனியில் யாருக்கோ ஏதோ சொல்ல, அகல்யா அப்படியே மயங்கினாள். கண்விழித்த போது அகல்யா ஏதோ ஒரு குடிலில் கிடந்தாள். உடல் முழுதும் வலித்தது. சுற்றும் முற்றும் பார்த்த பின் தான் இருக்கும் இடம் / கடந்த நாளின் நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.  மனதோடு பயமும் , திகிலும் பரவியது. சீனுவை அங்கே காணவில்லை. பதறி எழுந்தாள். தூரத்தில் விளையாடிய சிறுமியை அழைத்தாள். அருகில் வந்த அந்த சிறுமி அவளை ஏற இறங்க பார்த்தாள். பின்பு அவளது பாஷையில் (மராத்தி) ஏதோ கேட்டாள்.                                   அகல்யா விழி பிதுங்கின...

AGALYAAVIN PARISU - 12 அகல்யாவின் பரிசு - 12

 அகல்யாவின் பரிசு - 12                             தலை கால் தெரியாமல், பின்னங்கால் பிடரியில் பட ஓடுவது என்று நாம் படித்ததுண்டு. அது கண்டிப்பாக சீனுவிற்கு இப்பொழுது பொருந்தும். வித்யாசம் என்னவென்றால்  இங்கே ஓடியது கால்கள் அல்ல, பைக் சக்கரங்கள் . பயமா? சாமர்த்தியமா? எது சீனுவை துரத்தியது என்று தெரியவில்லை. ஆனால் அதுவே சமயத்திற்கு உதவியது.  வண்டி மும்பை - நாசிக் ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்தது. இரவு வேளை, நல்ல நிலவொளி, ரம்யமான சூழல்,ஆனால் அதை ரசிக்கவோ, அனுபவிக்கவோ இருவருக்கும் மனதில்லை. அகல்யா அழுது அழுது கண் சிவந்திருந்தாள். தந்தை என்ன பாடு படுகிறாரோ என்று வேதனை அடைந்தாள். அகல்யா, நீ ஒண்ணும் கவலைப்படாதே.நாம சீக்கிரமா நம்ம ஊருக்கு போயிடலாம் . அப்பாவை எப்படியாவுது  அவரது நண்பர் அழைத்து வந்து விடுவார்  என்று ஆறுதல் கூறினான். .  மெதுவாக சற்று பேசியபடியே சென்ற பைக் மீது மோதுவது போலே ஒரு டாடா சுமோ அருகில் வர, சீனுவிற்கு மீண்டும் தன்னை போலீஸ் அல்லது வேறு ...