Posts

Showing posts from May, 2018

அகல்யாவின் பரிசு - 7

அகல்யாவின் பரிசு - 7 குதூகலமும் கொண்டாட்டமுமாக நாட்கள் நகர்ந்தன. மறுநாள் அவர்கள் வழக்கப்படி தாய் தந்தையர்க்கு மணப்பெண் பாதபூஜை செய்து நன்றி தெரிவிக்கும் சடங்கு. அதற்கு நாராயணசாமியும் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. அகல்யா அப்பாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தாள்.  நாராயணசாமி அன்று காலை தனது கடைக்கு வந்து அன்றைய அலுவல்களை சீக்கிரம் முடித்துவிட்டு கிளம்ப முடிவெடுத்து துரித கதியில் இயங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீநிவாசன், தன் தாய் கொடுத்ததாக கூறி ஒரு தொகையை நாராயணசாமி வசம் ஒப்படைத்தான். ஸ்ரீனிவாசன், மண்ணின் மைந்தர்களுக்கே உரித்தான மாநிறம் கொண்டவன். கலையான முகம். எப்போதும் சிரிப்பு தவழும் உதடுகள். நல்ல கட்டுமஸ்தான உடம்பு. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன். ஆனால் பகுத்தறிவாளன். நல்ல ரசனை உள்ளவன். கவிதை, கலைகளில் ஈடுபாடு கொண்டவன். நம் கதை நாயகன்.  "என்ன சீனு, வீட்ல எப்படி நிலவரம்"என்றார் நாராயணசாமி. " ஐயா இப்போ ஒண்ணும் தொந்தரவு இல்ல, சுமுகமா தொழில் நடக்குதுங்க"என்றான். நல்லதுப்பா, ராஜலிங்கத்தால இனிமே ஏதும் பிரச்சினை வராது, எல்லாம் நல்லா...

ANNAI

அன்னை. அன்பெனும் சிறையில் அகப்பட்ட இறையே   ஈரைந்து மாதங்கள் எனக்கு உருதந்த உயிரே  ஈரேழு உலகெங்கும் கிடைக்காத  பேறே .. இது  நான் பெற்ற வரம்தானோ வேறென்ன கூற. யாதொன்றும் கைம்மாறு உனக்கு நான் செய்யக்காண்  ஈதுசெய்யேன்று இதுவரையில் கேளக்காண்..  தாயே !! உயிரெல்லாம் உறைபோட்டு உனக்காக வைத்திருக்கேன் அந்த உமையப்பன் வரம்நீட உனக்காக ஈந்துடுவேன் . நான் வாழ நலம் காண தவமிருக்கும் நிலவே   நீ என்றும் நலம் வாழ வேண்டுகின்றேன் இறையயை .. உன் நினைவால் அன்பூற்று உள்ளொன்று கசிகிறது  நீ என்றும் நலம் வாழ நெஞ்சமெல்லாம் பூக்கின்றது     தாயே வாழ்க!!    

AGALYAAVIN PARISU - 6 அகல்யாவின் பரிசு - 6

 அகல்யாவின் பரிசு - 6                                                   குற்றாலத்தில் அமைந்திருந்தது அந்த திருமணம். அகல்யா பெண் வீட்டாரை சார்ந்தவள். மணப்பெண் வீட்டில் அகல்யாவும் அவள் அத்தையும் திட்டமிட்டபடியே இரண்டு நாட்கள் முன்பாக வந்து தங்கினார். கல்யாண வீடு. குதூகலத்திற்கு கேட்கவும் வேண்டுமோ? வீடே அல்லோலகல்லோலப்பட்டது கல்யாண  வேலைகள் பலப்பல இருந்தாலும் எல்லோரும் பகிர்ந்துகொண்டே சிரித்து , சந்தோஷமாய் செய்தார்கள். கூடவே கலகலப்பும் , குறும்பு பேச்சுகளுக்கும் ,  உற்சாகத்திற்கும் குறைவே இல்லை. அகல்யா துறுதுறு வென்று ஓடியாடி வேலை செய்வதிலாகட்டும், அழும் குழந்தையை சமாதானப்படுத்தி விளையாட வைத்ததிலாகட்டும், மணப்பெண்ணின் ஆடை அலங்காரங்களில் ஒப்பனை நிபுணர் போலே சிறப்பாக செயலாற்றியதில் ஆகட்டும், வயதில் மூத்தோரை பணிவன்புடன் கவனித்துக் கொள்ளுதலிலாகட்டும், கன்னி இள மான்களோடு சொற்ஜாலங்கள் செய்து அவர்களை மடக்குவதிலாகட்டும், அகல்யா எல்லோர் நினை...

AGALYAAVIN PARISU - 5 - அகல்யாவின் பரிசு - 5

  அகல்யாவின் பரிசு - 5                                   அ கல்யாவிற்கு மனசு பொறுக்கவில்லை. ஏன் என்னுடைய வாழ்க்கை இப்படி அலை கழிக்கப்படுகிறது? என்ன பாவம் செய்தேன். பெற்ற மகனை அருகில் பார்த்தும் அவனை  கொஞ்சவோ, ஆரத்தழுவிக்கொள்ளவோ முடியாமல் போனதே. ஒன்றாக வாழத்தான் கொடுப்பினையில்லை , எப்போதோ ஒரு நேரம் கொஞ்சத்தான் சந்தர்ப்பம் இல்லாமல் இறைவன் ஏன் வஞ்சித்தான்? நெஞ்சம் விம்மி வெடித்தது. கிருஷ்ணா எவ்வளவு வளர்ந்துவிட்டான் , எவ்வளவு அழகாய் இருக்கிறான். அவன் முகத்தில் சந்தோஷமும் செழுமையும் மின்னுவதை அவள் காண தவறவில்லை. கோகுலிடம் அவன் சிறப்பாக வளர்வது அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. இதை பார்க்கும் பாக்கியமாவது இறைவன் தனக்கு அருளியதை நினைத்து அந்த தென்காசி விஸ்வநாதருக்கு மானசீகமாக நன்றி தெரிவித்துக்கொண்டாள். அழுவது என்பதே அறியாமல் வளர்ந்த தான் , இப்போது தன்னையும் அறியாமல் தாரை தாரையாக கண்ணீர் சிந்துவதை கண்டு தன்  நிலைமை இப்படியாகிவிட்டதே என்று மேலும் கண்ணீர் விட ஆரம்பித்தாள். பொங்கி...

AGALYAAVIN PARISU - 4 - அகல்யாவின் பரிசு - 4

                                அ ங்கு இருப்பது அத்தனை உத்தமம் என்று அகல்யாவிற்கு தோணவில்லை. மெதுவாக அங்கிருந்து முட்புதர்கள் மண்டிக்கிடந்த சாலையோர பரப்பில் வேகமாக யார் கண்ணிலும் படாமல் ஓடிப்போனாள். அவள் போவதை கிருஷ்ணா பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் நிலைமையை கண்டு ஏனோ அவனுக்கு கோகுலிடம் சொல்ல மனம் வரவில்லை போலும், அமைதியாக இருந்துவிட்டான்.? விரட்டி வந்த நான்கு பேரும் கோகுலிடம் " இந்த பக்கம் ஒரு பொண்ணு போனாளா ? "  என்று வினவினர்? கோகுல் மனதுக்குள் அந்த வேளை ஓர் எண்ண ஓட்டம் ஓடி ஓய்ந்திருந்தது. தனது ரகசியம் தெரிந்த ஒரே நபர் அகல்யா மட்டுமே. அவள் அழிந்தால் தனக்கு நிரந்தர மனஅமைதி கிடைக்கும் என்ற காரணத்தால் அவளை அவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்திருந்தான்.  " அமாம் , பார்த்தேன். " என்றான். எங்கே என்ற அவர்களிடம் , எதற்கு அந்த பெண்ணை தேடுகிறீர்கள்? அவள் எனக்கு ஒரு வகையில் தெரிந்தவர் தான் என்றான். ஓ !! அப்போ உனக்கு அவ இருக்கிற இடம் தெரியும் இல்ல? என்றவாறே " பளார்" என்று ஒரு அறை விட...

AGALYAAVIN PARISU - 3 - அகல்யாவின் பரிசு - 3

                   சீ ர்மிகு தென்காசிபட்டினம். பச்சைப்பசேலென்ற பசுமை ஆடையை போர்த்தி கொண்டு பாசமிகு மக்களை தாங்கி வாழும் பிராந்தியம். வணிகம் பிரதானமான தொழில். விவசாயமும், வணிகமும் இழைந்து வசதியான  வாழ்க்கை முறையை பறைசாற்றும் வல்லமை படைத்த மண்டலம். வசதி இருக்கும் இடம் வாய்மை பொய்த்து போகும் நிகழ்வுகள் நடப்பதை நாம் கண்கூடாக பலரது வாழ்வில் கண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஓர்  மாயவலையில் வீழ்ந்து பொய்த்திரை போர்த்திய மனிதர்களால் புண்பட்டு சிக்கி சிதிலமடைந்துப்போன ஒரு பாவப்பட்ட பெண் ஆத்மாவின் கதை இது. 15 வருடங்கள் முன்பு ஒரு நாள், மாலை 7 மணி, கிருஷ்ணா அவன் தந்தை கோகுலநாதனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தான் . தென்காசியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலை. ஆள் அரவம் குறைந்து இருந்த வேலை. வசந்தம் ஆஸ்பத்திரியை தாண்டி கருப்பண்ண ஸ்வாமி கோவில் அருகே ஒரு இருட்டிய வளைவில் போய்க்கொண்டிருந்த வண்டியின் மேல் யாரோ வேகமாக ஓடி வந்து விழ, கோகுலநாதன் நிலை தடுமாறி பிறகு சமாளித்து நிலை நிறுத்தினான். கோபத்தோடு...

AGALYAAVIN PARISU - 2 - அகல்யாவின் பரிசு - 2

அகல்யாவின் பரிசு - 2           தூ ரத்தில் சென்று கொண்டிருந்த அகல்யாவை கண்ட அவனுக்கு மனதில் பலப்பல எண்ண ஓட்டங்கள். எப்படி இருந்த மங்கை , வாழ்க்கை இவர்களை இப்படி புரட்டிப் போட்டு விட்டதே!! இறைவா இது நியாயமா? உலகில் யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது கடவுளே. எங்கே இருந்தார்கள் இவ்வளவு நாட்கள். வந்துவிட்டார்கள் என்று மகிழ்சியும் படமுடியவில்லை, வராமல் தொலைந்த நாட்களில் வருந்தாமலும் இருக்க முடியவில்லையே. என்ன கொடுமை இது. இருதலை கொள்ளி எறும்பாக என்னை ஏன் இப்படி அலைக்கழிக்கிறாய் இறைவா!!! .   வேகமாக நடையை துரிதப்படுத்தி அவளை அடைந்தான். அம்மா!! என்னம்மா இது கோலம் . ஏன் இப்படி இருக்கிறீர்கள்? . உடம்புக்கு ஒன்றும் இல்லையே ? நலமாக தானே இருக்கிறீர்கள்? மூச்சு விடாமல் பல கேள்விகளை கேட்டவன் , யாவதிற்கும் பதில் எதிர்பாராது , வாங்கம்மா வீட்டுக்கு போகலாம் என்று அழைத்துக்கொண்டிருந்த அந்த கணம் ...... " கிருஷ்ணா " நல்லா இருக்கியாப்பா என்றவாறே மயங்கி தரையில் சாய்ந்தாள் அகல்யா. சாய்ந்தவளை பிடித்து தாங்கி கொண்டு போய் அருகில் இருந்த மரத்தடியில் உட்கா...