Posts

Showing posts from June, 2018

AGALYAAVIN PARISU - 11 அகல்யாவின் பரிசு - 11

அகல்யாவின் பரிசு - 11                                        நாராயணசாமி பம்பாயில் வசிக்கும் தன் பால்ய நண்பரிடம் பேசி தேவையான வசதிகளை செய்துகொண்டார். புறப்படும் நாளும் வந்தது. முதலில் நாராயணசாமியும் , அகல்யாவும் பயணமானார்கள். ராஜலிங்கத்தின் ஆள் ஒருவனும் அவர்களுடன் அதே வண்டியில் பயணப்பட்டான் .ஒரு வாரம் கழித்து வரும்படி சீனுவிடம் கூறிவிட்டு கிளம்பி இருந்தார் நாராயணசாமி.                                           அகல்யா பாவாடை தாவணியில் பம்பாய் சென்றாள். அவள் தந்தையின் நண்பர் மகள் அவளை முழுவதுமாக மேற்கத்திய உடைகள் அணிய செய்து ஆளையே அடையாளம் காண முடியாத அளவு மாற்றிஇருந்தாள் தற்பொழுது. தந்தையும் மகளும் முதல் இரண்டு நாட்கள் நண்பர் குடும்பத்தோடு ஒரு சில இடங்கள் சென்று சுற்றி பார்த்தார்கள். ராஜலிங்கத்தின் ஆள் பின்தொடர்ந்து வந்து தகவல் அனுப்பிக்கொண்டிருந்தான...

AGALYAAVIN PARISU - 10 அகல்யாவின் பரிசு - 10

அகல்யாவின் பரிசு - 10                            அகல்யா கல்யாண வீட்டில் மிகமிக சந்தோஷமாக உலா வந்தாள். பலவிதமான வேலைகளில் ஈடுபட்டதால்  சீனுவை பற்றிய ஞாபகம் ஏதும் வராமல் இருந்தாள்.  மைதிலியின் கல்யாணமும் இனிதாய் நடந்து முடிந்தது. கல்யாணம் முடிந்து அகல்யா தன் வீட்டிற்கு புறப்படும் நேரமும் வந்தது. இப்போது தான் அகல்யாவின் மனதுக்குள் ஒரு விதமான சோகம் பரவுவதை உணர்ந்தாள். சீனுவை பிரியப்போகிறோம் என்பதே அதன் காரணமாக இருந்தது. அவனிடம் தன் காதலை உணர்த்த தவறியதற்காக தன்னை தானே நொந்துக்கொண்டாள். நாராயணசாமியும் அவளும் வீடு வந்து சேர்ந்தார்கள். மைதிலி தென்காசிக்கு  வாழப்போனாள். நாட்கள் நகர்ந்தன . அகல்யா சீனுவை காணாமல் சோர்ந்துபோய் இருந்த நேரம் வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டு வெளியே வந்தாள் . அங்கே சீனு நின்று கொண்டிருந்தான்.  ஐயா இல்லிங்களா ? இருக்கார் உள்ள வாங்க. உட்காருங்க . என்ன சாப்பிடுறீங்க ? அப்பா இப்போ வந்திடுவார் என்று பொரிந்து தள்ளினாள்....

AGALYAAVIN PARISU - 9 அகல்யாவின் பரிசு - 9

 அகல்யாவின் பரிசு -9  .                          ரா ஜலிங்கம் கொதித்தார், குமுறினார், குடித்தார் பின்பு அவரின் நண்பனின் தேற்றலில் அடங்கிப்போனார். அடுத்த முறை கண்டிப்பாக முடித்து விடலாம் என்றே சத்தியம் செய்தான் அவன்.                          மைதிலியின் வீடு அழகான தோரணங்களால்  அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நடுவீட்டில் ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. இருவர் அமரக்கூடிய அளவு இருக்கைகள் இருந்தன. அதன் எதிரே வாழை கன்றுகள் கட்டப்பட்டு நடுவில் வேங்கடநாதனின் திருஉருவப்படம் வைக்கப்பட்டு அதன் அருகில் சுமார் இருபது தட்டுகளில் வரிசை வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவே ஓர் அழகிய மாங்கன்றும்  இருந்தது. இடித்த பச்சரிசியில் பிடித்த மாவிளக்கு ஏற்றிவைக்கப்பட்டிருந்தது.                             சடங்கு, சம்பிரதாயம் ஆரம்பித்தது. குருக்கள் மந்திரம் சொல்ல மை...

AGALYAAVIN PARISU - 8 அகல்யாவின் பரிசு - 8

அகல்யாவின் பரிசு - 8                            அகல்யாவும், மைதிலியும், மற்றும் இதர பெண்களும் காலையிலேயே குளித்து, நல்ல உடை உடுத்தி மங்களகரமாக உலா வந்த வண்ணம் வேலைகளை செய்துகொண்டு இருந்தார்கள். பார்க்கவே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அந்த வீடு.  மைதிலி தன் பால்ய நினைவுகளில் மூழ்கி இருந்தாள். தந்தையோடு முதன் முதல் பள்ளிக்கு சென்றது முதல் அவரோடு  கழித்த அத்தனை நிகழ்வுகளும் மனதில் நிழலாட, அதில் நெகிழ்ந்து போன அவள் அவளையும் அறியாமல் மெல்ல கண்கசிந்தாள். எத்தனை அன்பான அப்பா. எவ்வளவு பாசத்தோடு நம்மை வளர்த்தார். இவரை பிரிந்து எப்படி நாம் வேறு ஒருவர் வீட்டில் வாழப்போகிறோம். எனக்கு மட்டும் தான் இந்த பாரமா? அல்லது அவருக்கும் இதே  போல் இருக்குமா? அவர் வாழ்வில் இவ்வளவு சந்தோஷமாக இருந்ததே இல்லையே. எப்படி அவரால் முடிகிறது. என்னை வழிஅனுப்புவதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷமா? மகளின் பிரிவைகூட மறக்கடித்து விடும் அளவு மகளின் திருமணமென்பது பெற்றோர்க்கு அத்தனை மகிழ்வளிக்கும் நிகழ்ச்சியா? என்னென...