AGALYAAVIN PARISU - 21 அகல்யாவின் பரிசு - 21
அகல்யாவின் பரிசு - 21 துவண்டுத்தான் போயிருந்தாள் அகல்யா. கண்கள் அழுது , சிவந்து வற்றி போயிருந்தது. ஏதேதோ நினைவுகள். என்ன பாவம் செய்தேனோ இப்பிறவியை பெற.முதலில் தாய் பிரிந்தாள். அன்புடனே அந்த குறை தெரியாது அப்பா வளர்த்தார். அவருக்கு கைமாறாக அவமானமும், மனக்கஷ்டமுமே கொடுக்கமுடிந்தது. இன்று எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. அன்பான கணவன் , அனாதையாய் விட்டு சென்றது கொடுமை. பெற்ற பிள்ளையும் பிரிந்துவிட்டது. மணவாழ்க்கையும் பங்கு போட்டு விட்டார்கள்.மானமான கற்பும் பறிபோனது. என்ன கொடுமை இது. எதற்க்காக இந்த பிறவி என்று ஆழ யோசித்தபோது ஒரு விஷயம் ஊர்ஜிதமானது அகல்யாவுக்கு. அவள் பிறவி எடுத்தது அவளுக்காக வாழ அல்ல. ஆண்டவனின் கணக்குப்படி அவள் பிறர்காகவே படைக்கப்பட்டிருக்கின்ற ஜன்மம் என்பதே அது. முடிவெடுத்தாள். தென்காசியில் உள்ளோரை பழிவாங்கும் எண்ணமும் தளர்ந்துபோனது.சரி இனி நம் ஆசாபாசங்கள் அனைத்தையும் மறந்து விட்டு பொது வாழ்வே தன் வாழ்வாய் மாற்றிக்கொண்டு இயன்ற வரை இவ்வுலகிற்கு சேவை ...