AGALYAAVIN PARISU - 1 - அகல்யாவின் பரிசு - 1
அகல்யாவின் பரிசு அ கல்யா அந்த நீண்ட நெடிய மாளிகையின் வாயிற்கதவருகே தள்ளாடி தள்ளாடி வந்து நின்றாள். முகத்தில் களைப்பு. பசித்த வயிறு. பாசம் பொங்கும் கண்கள். நரைத்த கீற்று ஆங்காங்கே, முதுமை முளை விட்டிருப்பதை பறைசாற்றியது. டக் ...டக் ...டக். வாயிற்கதவை தட்டினாள். காவற்காரன் கதவிடுக்கின் வழியே திறந்து பார்த்து, யாரம்மா என்ன வேணும் என்று கேட்டான். ஐயாவை பார்க்கணும்பா என்றாள் தயங்கியவாறே. நீ என்ன வேணும்மா அவருக்கு என்றான். எளிதாக கேட்டு விட்டான். என்னவென்று பதில் சொல்வது . ஐயோ இறைவா இது என்ன சோதனை. உண்மையை சொல்வதா அல்லது பொய்யுரைப்பதா? உண்மையை சொன்னால் உள்ளே இன்ப வாழ்வை அனுபவித்து கொண்டிருப்பவன் விரும்புவானா? அல்லது வெறுப்பானா?. அவன் சந்தோஷத்திற்காகத்தானே எல்லாம் செய்தோம், ஆதலால் இப்போதும் அவன் சந்தோஷப்படும்படி பொய்யே சொல்வோம் சென்று தீர்மானித்தாள். அய்யா எனக்கு தூரத்து சொந்தம், அவரை வந்து பார்க்கச்சொன்னதாக எனக்கு வந்து சொல்லி இருந்தாக , அதான் வந்தேன். போய் அகல்யா வந்திருக்காங்க என்று சொல்லப்பா. வரச்சொன்னா உள்ளாறே போறேன்; இல்லனா இப்படியே போய்டறேன், ரொம்ப களைப்பா...