malarum ninavalai
பொங்கும் பூம்புனல் நெஞ்சுக்குள்
பூபாளம் இசைக்குதடி!
தங்குமோர் பனிச்சுழல் தம்தம்முள்
தனிமைக்கும் துணையானதடி!
உலகெங்கும் உதிர்ந்திடினும் நட்பகத்துள்
ஓர்தனிஉலகம் சுழலுதடி!
தாங்கும் நினைவுகள் நம்மில்
தாலாட்டு பாடுதடி !
வண்ணங்கள் சேர்வதினால் இது வானவில்லோ !
வார்த்தைகளை கூடுவதால் இது கவிகளஞ்சியமோ!
வாலிபத்தை தக்கவைக்கும் வாழ்வியலோ !!
அனுபவத்தை பகிர்வதால் இது அறிவுக்கழகமோ!
அத்தனைக்கும் சேர்ந்தபெயர்தான் இம் " மலரும் நினைவுகளோ"!!
Comments
Post a Comment