நெற்றியடி

நெற்றியடி

சிலநேரம் வெள்ளையரில் என்னஉண்டென்று வியந்ததுண்டு
அவர்களது சீரும் சிறப்போ, பாத்தியதையோ, சலுகையோ அல்லது அதிகாரமோ !!
எதுவாயினும் எல்லாமே ஏதுவானது அவர்களுக்கு.
பொலிவிழந்து போராடவோ, வாளேந்தி போரிடவோ தேவையிருந்ததில்லை!!! 

வரலாறு  - அது எப்போதோ ஒருமுறை சரியாக எழுதப்படுகிறது!!
மூண்ட போரும், பெற்ற வெற்றிகளும் மின்னலாம்  ஆனால் அவை பொன்னல்ல,
அவை உண்மையுமல்ல,
இன்னும் பல,,
சாவின் முத்தம், சர்வாதிகாரம், என்று
எத்தனையோ வெற்றிகள் வெள்ளையரை பலமாக்கும் ஊக்கிகள்.
எதிர்ப்போருக்கு  நீடிக்கும் நீண்ட , கடின போருக்கான சவால்கள்.

நானும் வெள்ளையனே ,  இந்த ஒரு வீச்சத்தில்,
என் மனை பெண்டிற்க்கு அவர்களை விடவும் வலிமையில்.

இயற்கையின் சலுகையால் அடைந்த ஆணாதிக்க பலத்தின் வேகம்
என் மனை பெண்டிரை அவர்தம் நியாயஉரிமைக்கும் போரிடவைக்கும்.

நானும் ஒரு ஆயுதமாய் ஆகிப்போனேன் !!
அடிக்க, வளைக்க, நசுக்க , பொடிப்பொடியாக்கவென்று.
என் பெண்டிற்கு துயரிழைக்கும் இவ்வெள்ளையனை முதலில் கொன்று
பின்னரே போரிட்டு வாகை சூட வேண்டும் வெள்ளையனை வென்று.






Comments

Popular posts from this blog

AGALYAAVIN PARISU - 26 அகல்யாவின் பரிசு - 26

AGALYAAVIN PARISU - 25 அகல்யாவின் பரிசு - 25

PALLI PARUVAM